உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டில் பதுங்கிய பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

வீட்டில் பதுங்கிய பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

சென்னிமலை: சென்னிமலை - பெருந்துறை ரோட்டில், முருங்கக்காடு பகுதியில் ஒரு வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டதாக, சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு நேற்று தகவல் போனது. சென்னிமலை தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர் சென்றனர். வீட்டில் பதுங்கியிருந்த ஐந்தடி நீள சாரைப்பாம்பை, நவீன கருவி மூலம் உயிருடன் பிடித்தனர். வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி