உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இணைப்பு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

இணைப்பு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னிமலை: சென்னிமலை ஒன்றியம், பசுவபட்டி ஊராட்சியை சேர்ந்த தட்டாங்காட்டை சேர்ந்தவர் ஈஸ்வரன், ௫௫; பசுவபட்டி பிரிவில் இருந்து சென்னிமலைபாளையம் நொய்யல் பிரிவு வரையிலான இணைப்பு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில், விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முத்துக்குமார், 'பெருந்துறை நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் கொடுத்த அறிக்கையில், ஈஸ்வரன் மனு வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை உடனடியாக அளவீடு செய்து அத்து செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும்' என்று தெரிவித்தார். இதை உடனடியாக செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்திரவிட்டது.''உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த மூன்று மாதத்துக்குள், ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டால், மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்,'' என்று மனுதாரர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை