உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய உரைவாள் போட்டியில் குமுதா பள்ளிக்கு 2 பதக்கம்

தேசிய உரைவாள் போட்டியில் குமுதா பள்ளிக்கு 2 பதக்கம்

நம்பியூர், டிச. ௨௫-தேசிய அளவிலான உரைவாள் விளையாட்டு போட்டி, ஹரியானா மாநிலத்தில் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழக அணியில் பங்கேற்ற, 55 பேரில், நம்பியூர் குமுதா பள்ளி மாணவி நேத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கட்டா மற்றும் ஏரோஸ்கை பிரிவில் மூன்றாமிடம் பிடித்து, இரு வெண்கல பதக்கம் வென்றார்.தேசிய அளவில் சாதனை படைத்த மாணவியை, தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை