மேலும் செய்திகள்
தொடர் மழையால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு
15-Nov-2024
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனைபுன்செய் புளியம்பட்டி, நவ. 29-ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வியாழன்தோறும் கூடுகிறது. நேற்று நடந்த சந்தைக்கு, 10 எருமை, 200 கலப்பின மாடு, 80 கன்று, 220 ஜெர்சி மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமை, 20-32 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 22-43 ஆயிரம் ரூபாய், ஜெர்சி மாடு, 23-49 ஆயிரம் ரூபாய், சிந்து மாடு, 20-44 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 40-76 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. வளர்ப்பு கன்றுகள், 8,000 முதல், 15 ஆயிரம் வரை விற்பனையானது. கர்நாடக, கேரளா மாநில வியாபாரிகள் அதிகம் வாங்கிச்சென்றனர்.அதேபோல், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ வெள்ளாடு, 7,000 ரூபாய் வரை, 10 கிலோ செம்மறி ஆடு, 6,500 ரூபாய் வரை விற்பனையானது. அனைத்து கால்நடைகளும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 40 கன்றுகள், 22,000 ரூபாய் முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள், 23,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 50க்கும் குறைவான கலப்பின மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 80 சதவீத கால்நடை விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
15-Nov-2024