கவுந்தப்பாடியில் இன்று நாட்டு சர்க்கரை ஏலம்
கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று மதியம், 1:00 மணிக்கு, நாட்டு சர்க்கரை ஏலம் நடக்கிறது. இதில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்ய உள்ளனர். உற்பத்தியாளர்கள் கல், ஈரப்பதம், கட்டி, கலப்படம் இல்லாமல் நாட்டு சர்க்கரை கொண்டு வர, அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.