யானையை தடுக்கும் பனை வனத்துறையினர் மகிழ்ச்சி
அந்தியூர்: அந்தியூர் வனச்சரகம் சார்பில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு, வரட்டுப்பள்ளம் ஜடசாமி கோவில் காவல் சுற்று முதல் சென்றாயனுார் வன எல்லை வரை, பனை விதை நேற்று நடவு செய்யப்பட்டது. வனக்குழுவினர், தன்னார்வலர், பொது-மக்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் மூலம், 1,500க்கும் மேற்-பட்ட விதை நடப்பட்டது. வனப்பகுதி எல்லையில் பனை விதைகள் நடும்போது மரங்களாக வளர்ந்து வேலியாக மாறும். இதனால் காட்டிலிருந்து யானைகள் வெளியேறாமல் தடுக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.