உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டுமனை பட்டா கேட்டு மனு வழங்கிய மக்கள்

வீட்டுமனை பட்டா கேட்டு மனு வழங்கிய மக்கள்

பவானி, பவானி அருகே ஓலகடம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட தாளபாளையம், ஜெயந்தி நகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி, பல முறை பல துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள், பவானி தாசில்தார், வெங்கடேஸ்வரனிடம் மனுஅளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !