உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாட்டு சர்க்கரை, உ.வெல்லம் ரூ.76.14 லட்சத்துக்கு கொள்முதல்

நாட்டு சர்க்கரை, உ.வெல்லம் ரூ.76.14 லட்சத்துக்கு கொள்முதல்

கோபி, டிச. 22-கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம்(திடம்), 60 கிலோ மூட்டையாக, 2,690 ரூபாய் முதல், 2,700 ரூபாய் வரை விற்பனையானது.இரண்டாம் தரம் (மீடியம்), 2,430 ரூபாய் முதல், 2,480 ரூபாய் வரை விற்றது. வரத்தான 3,054 மூட்டைகளும், 75.32 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் உருண்டை வெல்லம், 50 மூட்டை (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,650 ரூபாய் விலையில், 82 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 76.14 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை