உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷன் கடைகளில் இன்று முகாம் இ-கே.ஒய்.சி., பதிவுக்கு அழைப்பு

ரேஷன் கடைகளில் இன்று முகாம் இ-கே.ஒய்.சி., பதிவுக்கு அழைப்பு

ஈரோடு:தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில் கை விரல் ரேகை பதிவு, கண் கருவிழி சரி பார்ப்பு எனும் 'இ-கே.ஒய்.சி.,' மேற்கொள்ளாத அனைத்து ரேஷன் கார்டுதாரர் பயனாளிகளுக்காக கடந்த, 2, 8, 9 ஆகிய நாட்களில் அனைத்து ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடந்தது.அன்று விற்பனை முனைய இயந்திரம் மூலம் விரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் இ-கே.ஒய்.சி., பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிவை, 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில் இன்று (29) அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. கைவிரல் ரேகை பதிவு மேற்கொள்ளதா 'PHH-AYY, PHH -- NPHH' ரேஷன் கார்டுதாரர்கள், கைவிரல் ரேகை பதிவு செய்து பயன் பெறலாம்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை