உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

வாய்க்கால் பாசனத்துக்குதண்ணீர் திறப்பு குறைப்புபுன்செய் புளியம்பட்டி, அக். 22-பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில், 2300 கன அடி நீர்; அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல், கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று மாலை, 700 கன அடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. அதேசமயம் அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால், அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 89.37 அடி; நீர் இருப்பு, 21.1 டி.எம்.சி.,; நீர்வரத்து, 2,366 கன அடியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை