கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்-துக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்க-ளாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் தேவை குறைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலிலும், 2,300 கன அடி தண்ணீர், 1,600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 87.10 அடி, நீர் இருப்பு, 19.7 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நீர்வரத்து, 1,782 கன அடியாக இருந்தது.