மேலும் செய்திகள்
நீர்மட்டம் சரிவு
22-Sep-2024
காளிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
05-Sep-2024
பு.புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை மொத்த நீர்மட்டம், 105 அடி; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசனத்திற்கு, நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 943 கன அடியாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 89.10 அடி, நீர் இருப்பு, 21 டி.எம்.சி.,யாக இருந்தது. பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீர், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 700 கன அடி தண்ணீர் மற்றும் குடிநீருக்காக, 100 கன அடி என மொத்தம், 3,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீர் வரத்தை விட, பாசனத்திற்காக நீர் திறப்பு கூடுதலாக இருப்பதால், பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
22-Sep-2024
05-Sep-2024