போக்குவரத்து விதி மீறலில் ரூ.3 லட்சம் அபராதம் வசூல்
காங்கேயம்: காங்கேயத்தில் போக்குவரத்து விதி மீறியவர்களிடம், 3 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. காங்கேயம் போக்குவரத்து போலீசார், நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்து அப-ராதம் வசூலிக்கின்றனர். இதன்படி கடந்த மாதத்தில் நடந்த சோதனையில் பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 1,808 வாகன ஓட்-டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதன் மூலம், 3.௦௨ லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும், காங்கேயம் போக்-குவரத்து இன்ஸ்பெக்டர் லாயல் இன்னாசிமேரி தெரிவித்தார்.