உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தி, தாளவாடியில் தொடர் மழையால் அவதி

சத்தி, தாளவாடியில் தொடர் மழையால் அவதி

சத்தியமங்கலம்,: சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதி-காலை முதலே பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. பின் இடைவெளி விட்டு காலை, 8:00 மணி முதல் சாரல் மழை-யாக மாறியது. இதனால் விவசாய பணிகள் மட்டுமின்றி, பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தாளவாடிம-லையில் நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை தொடர்ந்து பெய்தது. நேற்று காலையும் மழை தொடர்ந்தது.* அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை, 6:00 மணி முதல், 8:௦0 மணி வரை, மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்வோர் மற்றும் வேலைக்கு செல்ப-வர்கள் குடைபிடித்து சென்றனர். தொடர் மழையால் அந்தியூர் வாரச்சந்தை வளாகம் சேறு, சகதியாக மாறியது. மக்கள் தடுமாறியபடி சென்று காய்கறி வாங்கினர்.* பெஞ்சல் புயலால், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்ச-மாக சென்னிமலையில், 27 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்-களில் பதிவான மழை விபரம் (மி.மீ.,ல்): நம்பியூர்,ஈரோடு தலா-9, மொடக்குறிச்சி, கொடுமுடி தலா-12, பெருந்துறை-20, கொடி-வேரி,பவானி தலா-14, கவுந்தப்பாடி-7.60, அம்மாபேட்டை-10.20, வரட்டுபள்ளம் அணை-18, கோபி-16.20, எலந்தகுட்டை மேடு-17.60, குண்டேரிபள்ளம்-6, சத்தி-11, பவானிசாகர்-17.20, தாள-வாடி-6.40.* கோபி அருகே சிறுவலுார், பதிப்பாளையம், மீன்கிணறு உள்-ளிட்ட பகுதியில் நேற்று மாலை, 5:00 மணிக்கு பலத்த மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த மழையால், மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் கோபி, மொடச்சூர், நாதிபாளையம், பொலவக்காளி-பாளையம், வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம் உள்ளிட்ட பகுதியில், மாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்தது.* நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வேமண்டம்பா-ளையம், கோசணம், மலையப்பாளையம், எலத்துார், குருமந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மதியம், 3:௦௦ மணிக்கு தொடங்கிய மழை இரவு வரை பரவலாக பெய்தது. அதேசமயம் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனம-ழையால் குளம், குட்டைகள் நிரம்பி தரைப்பாலங்களை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !