பயனாளிகளுக்கு விதை தொகுப்பு
கோபி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கவுந்தப்பாடியில் நேற்று நடந்த, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் துவக்க விழாவை, ஈரோடு கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட, 31 பயனாளிகளுக்கு, பயிர் வகை அடங்கிய விதை தொகுப்பு, காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்பை வழங்கினார். நிகழ்வில் உதவி கலெக்டர் (பயிற்சி) காஞ்சன் சவுத்ரி, தோட்டக்கலை துணை இயக்குனர் குரு சரஸ்வதி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.