விவசாய நிலத்தில் புகுந்த யானையால் கடும் அவதி
அந்தியூர்: அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி, தம்முரெட்டியில், ஐந்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தில், அப்-பகுதி விவசாயிகள், சோளப்பயிர்களை பயிரிட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக, வனப்பகுதி ஒட்டியுள்ள சோளக்காட்டில் புகுந்த ஒற்றை ஆண் யானை, பயிர்களை முற்றிலும் சேதப்ப-டுத்தி வருகிறது. பட்டாசுகள் வெடித்தாலும் வெளியே சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. பர்கூர் வனத்துறையினருக்கு அப்ப-குதி விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.