ரயில் டிரைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு: அகில இந்திய ரயில்வே ஓடும் தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோட்டை சேர்ந்த இரு ரயில் டிரைவர்களுக்கு கூட்ஸ் ரயிலில் இருந்து பாசஞ்சர் ரயில் டிரைவர்களாக பதவி உயர்வு வழங்க மறுக்கும், சேலம் கோட்ட முதுநிலை பொறியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கோட்ட செயலாளர் அருண் குமார், தென்மண்டல செயலாளர் பிஜூ, கிளை செயலாளர் ரகுமான் உள்பட, 30 டிரைவர்கள், உதவி டிரைவர்கள் கலந்து கொண்டனர்.