தனியார் வேளாண் மாணவியருக்கு பயிற்சி
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஜே.கே.கே., முனிராஜா வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள் பாவன திரிஷா, தனுஷ்யா, கோபிகா, கனிஷ்கா, மவுனிகா, ஓம்ஸ்ரீ, பவித்ரா, ரிஸ்வானா, சந்தியா, தாரணி உள்ளிட்ட மாணவியர் பங்கேற்றனர். வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், விவசாயிகளுக்கான பிரச்னைகளுக்கு வேளாண் துறையினர் வழங்கும் தீர்வு, கூட்ட நடைமுறை குறித்து, மாணவியருக்கு பயிற்சி தரப்பட்டது.