உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி

லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி

புதுச்சத்திரம்: தர்மபுரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்தவர் திருமலை, 21; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு முள்ளங்கி லோடு ஏற்றிக்கொண்டு, திருச்சி மார்க்கெட்டை நோக்கி சென்று-கொண்டிருந்தார். புதுச்சத்திரம் அருகே, ரெட்டிபுதுார் வழியாக சென்றபோது, டிரைவர் திருமலை கண் அயர்ந்துள்ளார். அப்-போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் திருமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரிமங்கலத்தை சேர்ந்த கிளீனர் கோகுல், 20, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரு-கிறார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ