உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேரள லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

கேரள லாட்டரி சீட்டு விற்ற இரண்டு பேர் கைது

பவானி:கேரள லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.பவானி அடுத்த ஆப்பக்கூடல், புதுப்பாளையத்தில், கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, ஆப்பக்கூடல் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சென்ற போது இருவர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். அந்தியூர், பிரம்மதேசத்தை சேர்ந்த வெங்கடேசன், 48; ஆப்பக்கூடல், புதுப்பாளையம் மணி, 65, என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 288 கேரள லாட்டரி சீட்டு, 54,600 ரூபாயை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி