ஈரோடு கலெக்டர் எழுதிய இரண்டு புத்தகம் வெளியீடு
சென்னிமலை:சென்னிமலை திருக்குறள் பேரவை, மகாகவி ஈரோடு தமிழன்பன் கலை இலக்கிய பேரவை, இணைந்து சென்னிமலையில் முப்பெரும் விழா நடத்தினர். திருக்குறள் பேரவை தலைவர் புலவர் திருவள்ளுவர் தலைமை வகித்தார். இதில் ஈரோடு கலெக்டர் கந்தசாமி எழுதிய, சென்னிமலை வெண்பா மாலை, பண்ணாரி நாயகி என்ற இரு நுால் வெளியிடபட்டது. மேலப்பாளையம் ஆதிநாரயண பெருமாள் கோவில் அறங்ஙகாவலர் குழு தலைவர் விஜயகுமார், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் பழனிவேலு, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக கலெக்டர் கந்தசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.