உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வழக்கறிஞர் கொலையில் மேலும் இருவர் கைது

வழக்கறிஞர் கொலையில் மேலும் இருவர் கைது

தாராபுரம்: தாராபுரத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், 41; தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணி உள்பட 6 பேர் கும்-பலால், கடந்த ஜூலை, 28ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனிப்படை போலீசார், 12 பேரை கைது செய்துள்-ளனர்.இந்நிலையில் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும், கரூரை சேர்ந்த சக்திவேல், 49; கரூர், பஞ்சமாதேவி பாலமணிகண்டன், 47, ஆகியோரை நேற்று கைது செய்தனர். தாராபுரம் குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன் ஆஜர்படுத்தினர். வரும், 28ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ஏற்க-னவே நீதிமன்ற காவலில் உள்ள, 12 பேருக்கும், 28ம் தேதி வரை காவலை நீட்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !