வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்
சத்தியமங்கலம். சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வன சோதனைச்சாவடிக்கு பின்புறம் உள்ள பள்ளத்தில், அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கிடந்ததை, நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பார்த்தனர். இது குறித்து வனத்துறையினர் அளித்த புகார்படி, சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.