பென்னாகரம்: சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளை-யொட்டி, பென்னாகரம் அரசு தலைமை மருத்து-வமனை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, பல்-வேறு அரசியல் கட்சியினர், நேற்று காலை முதலே மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிலையில், பா.ஜ.க., மாவட்ட தலைவர் சர-வணன் தலைமையில், பா.ஜ.க.,வினர் அம்-பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அங்கு வந்-தனர். அப்போது அங்கிருந்த, வி.சி., கட்சியின் மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் தலைமை-யிலான கட்சியினர், பா.ஜ.க.,வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என தடுத்-தனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே வாக்கு-வாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர். இந்நிலையில், பா.ஜ.க.,வினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியி-னருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து, அங்கு விரைந்த பென்னாகரம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்-பெக்டர் முரளி தலைமையிலான போலீசார், அக்-கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடு-பட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, பா.ஜ.க.,வினரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க செய்தனர். இதையடுத்து, இரு கட்சி-யினரும் கலைந்து சென்றனர்.