உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலவாரியத்தில் பதிவு செய்ய பெண்கள், திருநங்கைகளுக்கு அழைப்பு

நலவாரியத்தில் பதிவு செய்ய பெண்கள், திருநங்கைகளுக்கு அழைப்பு

ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், 19 நலவாரியங்கள் செயல்படுகிறது. இதில், பெண்கள், திருநங்கை ஓட்டுனர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில், www.tnuwwb.inஎன்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். உறுப்பின-ராகும் பெண், திருநங்கை ஓட்டுனர்கள், சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவித்து, அதிக வருமானம் ஈட்டி, சுய தொழில் செய்யும் வாய்ப்பை உருவாக்கலாம். புதிய ஆட்டோ, டாக்ஸி வாங்குவதற்கு ஆகும் செலவில், மானியமாக தலா, 1 லட்சம் ரூபாய், 1,000 பெண்கள், திருநங்கை ஓட்டுனர்களுக்கு வழங்கப்-படுகிறது.நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் முகாம், ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நடைபெறுகிறது. இப்பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு கட்டணம் இல்லை. நலவா-ரிய உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, இரு குழந்தைக-ளுக்கு கல்வி நிதியுதவி உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்-கப்படுகிறது.உறுப்பினர் பதிவுக்கு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், அசல் ஆதார் அட்டை, அசல் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்-கான ஆவணத்துடன், www.tnuwwb.inஎன்ற இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு ஒப்புதல் அளிக்கப்பட்-டதும், நலவாரிய அட்டையை உறுப்பினர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அல்லது, 0424 2275591, 2275592 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ