உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி அருகே சாலை விரிவாக்க பணிக்காக 240 மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரம்

கோபி அருகே சாலை விரிவாக்க பணிக்காக 240 மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரம்

கோபி: கோபி-சத்தி சாலை விரிவாக்கத்துக்காக, பழமையான, 240 மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.ஈரோடு மாவட்டம் கோபி அருகே அக்கரை கொடிவேரி பிரிவு முதல், அரசூர் அருகே மூலக்கிணறு வரையிலான பிரதான சத்தி சாலையில், 6 கி.மீ., துாரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படு-கிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் இப்ப-ணியில், சாலையின் இருபுறமும் உள்ள, சவுடாள், ஆலமரம், துாங்குமூஞ்சி, புங்கன் என, 50 ஆண்டுகள் பழமையான, 240 மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த பத்து நாட்களாக மரம் வெட்டும் பணி நடந்து வருகிறது. மரங்களை துண்டு துண்டாகவெட்டி, திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளின் எரிபொருள் உப-யோகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்றுவரை, 95 சதவீத மரங்களை வெட்டி, 130 டன் மரத்துண்டு அனுப்பி வைக்கப்பட்-டுள்ளதாக, பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்-தனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (சத்தி) சவுந்தரராஜன் கூறியதாவது: மரத்தை வெட்டி விட்டு, அதன் பின் மரக்கன்று நாங்கள் நடுவதில்லை. முதலில் மரக்-கன்றை நட்டுவிட்டு தான் மரம் வெட்டப்படுகிறது. சத்தியமங்கலம் வேளாண்மை துறை விதைப்பண்ணை அருகே-யுள்ள இடத்தில் மரக்கன்று வளர்த்து வருகிறோம். எங்கெல்லாம் இடவசதி உள்ளதோ அங்கெல்லாம் மரக்கன்று நட்டு வளர்த்து வருகிறோம். சத்தி சப்-டிவிஷன் பகுதியில் இதுவரை, 9,680 மரக்-கன்று நட்டு வளர்த்து வருகிறோம். மரத்தை வெட்டிய பகுதியி-லேயே மரக்கன்றுகள் நடுவதில்லை. தண்ணீர் வசதி உள்ள இடத்தில் அல்லது எங்கு அந்த மரக்கன்றுகள் வளர்கிறது என கண்டறிந்து நட்டு வளர்க்கிறோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை