உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வராஹி அம்மனுக்கு திருவிளக்கு பூஜைகள் 

வராஹி அம்மனுக்கு திருவிளக்கு பூஜைகள் 

சின்னசேலம், : சின்னசேலம் சிவன் கோவிலில் வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதி திருவிளக்கு பூஜைகள் நடந்தது.சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. அம்மனுக்கு 11 லட்சம் நோட்டுகளால் அலங்காரமும், 200 சவரன் நகையாலும் அலங்காரம் செய்து மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். பூஜைகளை வெங்கடேசன் குருக்கள் செய்து வைத்தார். ஏற்பாடுகளை சின்னசேலம் பைரவர் நிதி நிறுவனத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்