| ADDED : ஜூலை 19, 2024 05:09 AM
கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 104 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். முகாமில் அரசு எலும்பு முறிவு மருத்துவர் காமராஜ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் பாக்கியராஜ், கண் மருத்துவர் காயத்திரி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். தொடர்ந்து 104 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.