உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் 19 பேர் மீது வழக்கு

சங்கராபுரத்தில் 19 பேர் மீது வழக்கு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சங்கராபுரத்தில், வாகன ஓட்டிகள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலைகளில் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம், வேகம், குடிபோதை, ெஹல்மெட், சீட் பெல்ட் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில், 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை