உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எஸ்.பி., அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, எஸ்.பி., சமய்சிங்மீனா தலைமை தாங்கினார். கூட்டத்தில் குற்ற வழக்குகளை குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போதைய நிலைகள் குறித்து எஸ்.பி., கேட்டறிந்தார். தொடர்ந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.ஏப்ரல் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், நந்தகுமார், கவிதா மற்றும் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.கூட்டத்தில் ஏடி.எஸ்.பி.,க்கள் பாண்டிசெல்வம், மணிகண்டன், டி.எஸ்.பி.,க்கள், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி