உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த சின்னகொள்ளியூர் தக்காவைச் சேர்ந்தவர் சலீம் மகள் தாரா, 18; பிளஸ் 1 வரை படித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் பகண்டைகூட்ரோட்டில் உள்ள சித்தி நஜீமாவின் வீட்டிற்கு சென்றவர் அங்கேயே தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் மதியம் கடைக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த அவரது தாய் சாய்னா அளித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சின்னசேலம்

சின்னசேலத்தை சேர்ந்தவர் சேகர் மகள் சிலம்பரசி, 19; தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார். இவரை, கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் பஞ்சாயி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை