உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத் திறனாளிகள் 121 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

மாற்றுத் திறனாளிகள் 121 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடந்தது.சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.பல்வேறு துறை டாக்டர்கள், சிவராமன் உஷாநந்தினி, கணேஷ்ராஜா, லோகநாயகி, பிரபாகரன் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர். 40 சதவீதம் அல்லது அதற்குமேல் பாதிக்கப்பட்ட 121 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து அனைவருக்கும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ