கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி சாவு
மூங்கில்துறைப்பட்டு : கீழே விழுந்து காயமடைந்த கூலித் தொழிலாளி இறந்தார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆற்கவாடியை சேர்ந்தவர் மணிமாறன்,45; கூலி தொழிலாளி. நேற்று வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.