உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பைக்கில் பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த கடுவனுார், தொழுவந்தாங்கல் சாலையில் நேற்று சங்கராபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் பிராந்தி பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன், 45; அதே ஊரைச் சேர்ந்த கணேசன், 35; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, பைக் மற்றும் 50 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !