மேலும் செய்திகள்
ஸ்கூட்டியில் சென்றவர் லாரி மோதி பலி
03-Jan-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சாலையில் சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று கடித்ததில் 27 பேர் காயமடைந்தனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று பொதுமக்கள் சிலரை விரட்டி கடித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று கூடி தெரு நாயைவிரட்டியடித்தனர்.அதனையொட்டி, கோட்டைமேடு, மோரைபாதை, செக்குமேட்டு தெரு பகுதிக்கு சென்ற வெறிநாய் அவ்வழியாக சென்றவர்களை விரட்டி கடித்துள்ளது.இதில் கருணாபுரம், கோட்டைமேடு, மோரைபாதை சேர்ந்த மணிகண்டன், திலீப், ராஜ்குமார், சிவசங்கர், அனுஷா, ஜெயக்குமார் உட்பட 27 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.வெறிநாய் கடித்து 27 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
03-Jan-2025