உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இருவரை தாக்கிய வாலிபர்கள் மீது வழக்கு

இருவரை தாக்கிய வாலிபர்கள் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே தகராறில் இருவரை தாக்கிய வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் முருகையன் மகன் வினோத், 27. இவரது நண்பரை அதே பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் முரளி, 21; பச்சமுத்து மகன் ஆதிகேசவன் ஆகியோர் கடந்த 11ம் தேதி வழிமறித்து தகராறு செய்தனர்.இதனையறிந்த வினோத், தனது நண்பர் மகேந்திரன் அழைத்து சென்று கேட்டபோது முரளி, ஆதிகேசவன் ஆகியோர் சேர்ந்து தடியால் இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.வினோத் புகாரின் பேரில் முரளி, ஆதிகேசவன் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி