பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கஜோதி பேசினார். வரும் 23ம் தேதி கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் நடத்தும் 'சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க' மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.