உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தெரு நாய்கள் மீது ஏர்கன் துப்பாக்கி சூடு; தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

தெரு நாய்கள் மீது ஏர்கன் துப்பாக்கி சூடு; தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய 3 பேர் கைது

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே தெரு நாய்களை ஏர்கன் துப்பாக்கியதால் சுட்டது குறித்து தட்டிக் கேட்ட மூதாட்டியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த விரியூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யன் மனைவி கலியம்மாள், 64; இவர் நேற்று முன்தினம் காலை வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது சண்டை கோழி வளர்க்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசாமி, 50; இவரது மகன் நாராயணசாமி, 20; மற்றும் அந்தோணிராஜ் மகன் அரோக்கியசாமி, 22; அருணாசலம் மகன் விஜயன், 32; ஆகியோர் ஏர்கன் துப்பாக்கியால் தெரு நாய்களை சுட்டனர். இதனை தட்டிக்கேட்ட கலியம்மாளை, வீரசாமி உட்பட 4 பேரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கலியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, வீரசாமி, நாராயணசாமி, அரோக்கியசாமி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை