உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மீது பஸ் மோதல்; மூதாட்டி பலி

பைக் மீது பஸ் மோதல்; மூதாட்டி பலி

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே பஸ் மோதி பைக்கில் சென்ற மூதாட்டி இறந்தார். அரகண்டநல்லுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 67; இவரது மனைவி தேன்மொழி, 65; நேற்று முன்தினம் பைக்கில் திருக்கோவிலுார் சென்று கொண்டிருந்தனர். மணம்பூண்டி அருகே சென்ற போது, பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தேன்மொழியை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் தனியார் பஸ் டிரைவர் சஞ்சீவி, 41; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்