உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் இன்று நடக்க இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுகிறது.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்றுமாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடந்து வருகிறது.டாக்டர்கள் பரிசோதனை செய்து பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியஅடையாள அட்டை வழங்க ஒப்புதல் அளிப்பர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.இந்நிலையில் பெஞ்சல் புயல் மழை காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுவதாக மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை