முன்விரோத தகராறு 2 பேர் மீது வழக்கு
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவர் பாபு. அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இருவருக்குமிடையே குடும்ப பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த 24ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில், பாபு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், மாரிமுத்து, பாபு ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.