உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழா நடந்தது.திருக்கோவிலுார், மருத்துவமனை சாலையில் உள்ள, பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத விசாக நட்சத்திர பெருவிழா கடந்த,3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், 5ம் நாளான நேற்று காலை சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலையில், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மயில் வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மாலை வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும் வரும்,11ம் தேதி ஞாயிற்றுக் காலை தேரோட்டமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை