ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு : கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு நடத்தினார். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுப்பணி நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் சேமிப்பு குடோனில் ஆய்வு நடத்திானர். அப்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு, சேமிப்பு கிடங்கு கட்டடம் ஸ்தர தன்மை, அனுமதியின்றி வெளி நபர்கள் வருகின்றார்களா என ஆய்வு செய்தார்.