பெஞ்சல் புயல்: மக்களுக்கு உதவிட 10 கட்டுப்பாட்டு அறைகள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயல், மழை பாதிப்புகளுக்கு உதவிடும் வகையில் 24 மணி நேரம் இயங்கும் 10 கட்டுப்பாட்டு அறைகள் துவங்கப்பட்டுள்ளது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம், இரண்டு ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மற்றும் 7 தாலுகா அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண் 1077 மற்றும் புகார் தொலைபேசி 04151-228801 ஆகும்.ஆர்.டி.ஓ., அலுவலகங்களான கள்ளக்குறிச்சி 04151-222493 திருக்கோவிலுார் 04153-252312 தாலுகா அலுவலகங்களான கள்ளக்குறிச்சி 04151-222449, சின்னசேலம் 04151-257400, சங்கராபுரம் 04151-235329, வானாபுரம் 04151-235400, கல்வராயன்மலை 04151-242333, திருக்கோவிலுார் 04153-252316, உளுந்துார்பேட்டை 04149-222255 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் மழைபாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் ஏதும் தேவைப்படின் மேற்படி 10 கட்டுப்பாட்டு அறைகளையும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.