மேலும் செய்திகள்
வாலிபர் மாயம் போலீஸ் தேடல்
04-Oct-2025
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்புகள் எரிந்து சேதமானது. சங்கராபுரம் அடுத்த கிடங்கன்பாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் கணபதி. விவசாயி. இவர் வயலில் பயிரிட்டிருந்த கரும்பு தோட்டம் நேற்று மதியம் 12:00 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
04-Oct-2025