மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
24-Mar-2025
காட்டுமன்னார்கோவில் : கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த, பிள்ளையார் தாங்கலை சேர்ந்தவர் சுர்ஜித்குமார், 23; கஞ்சா வியாபாரி. இவர் மீது குமராட்சி காவல் நிலையத்தில், பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ஜெயகுமார் பரிந்துரை செய்தார்.இதையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், சுர்ஜித்குமாரை குண்டாசில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை, கடலுார் மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.
24-Mar-2025