உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வீடு புகுந்து நகை பணம் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

 வீடு புகுந்து நகை பணம் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டு உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 67; ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர். இவர் கடந்த 30 ம் தேதி சேலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ