உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியவரிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

முதியவரிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே சாலையோரம் நின்ற முதியவரிடம் 3 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த மாடூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் தங்கராஜ்; 63. இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மாடூர் பஸ் நிறுத்தம் அருகே சேலம் - சென்னை நான்கு வழி சாலையோரம் தான் புதிதாக கட்டும் அப்பார்ட்மெண்ட் முன்பு நின்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், தங்கராஜ் அணிந்திருந்த மூன்று சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய்.தங்கராஜ் கொடுத்த புகாரின் படி, தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்