உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏரியில் தவறி விழுந்தவர் பலி

ஏரியில் தவறி விழுந்தவர் பலி

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே ஏரியில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டை சேர்ந்தவர் முருகன், 50; இவர் கடந்த, 8 ம் தேதி குடிபோதையில் அதே ஊரில் உள்ள ஏரியில் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை