என்.எஸ்.எஸ்., துவக்க விழா..
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்.. துவக்க விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பரசுராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.